தமிழ் திரையுலகில் நகைச்சுவைக்கு என்று தனக்கு தனி பாணியை உருவாக்கியவர் மயில்சாமி. 100 படங்களுக்கு மேல் தன் நகைச்சுவையால் ரசிகர்களை மகிழ்வித்து உள்ளார்.
சமீப காலமாக திரையுலகில் பல பிரபலங்கள் மரணம் நிகழ்ந்து வருகின்றது. சமீபத்தில் புகழ்பெற்ற பாடகி வாணி ஜெயராம், பழம்பெரும் நடிகர் விஸ்வநாத், மிக சிறந்த இயக்குனர் டி.பி. கஜேந்திரன் போன்றோர் இறந்தது திரை உலகிற்கு பேரிழப்பாக இருந்தது.
அந்த வரிசையில் தற்போது நகைச்சுவை ஜாம்பவானான மயில்சாமி இன்று உயிரிழந்துள்ளார். ரஜினி, கமலை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடனும், தன் காமெடியால் மக்களை மகிழ்வித்தவர் மயில்சாமி. கொரோனா காலகட்டத்தில் பல ஆதரவற்றோர்களுக்கு உதவிகளை வழங்கியும் உள்ளார்.
இந்நிலையில் நேற்று மகா சிவராத்திரி அன்று கேளம்பாக்கத்தில் இருக்கும் சிவன் கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்று உள்ளார். தரிசனத்தை பெற்று விட்டு வீட்டிற்கு வரும் வழியிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது.
உடனே பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கு உள்ள டாக்டர்கள் இவரை பரிசோதித்து விட்டு மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டார் என்று உறுதி செய்து உள்ளனர். மயில்சாமியின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். அவருடன் அவர் இறுதி சடங்கில் தற்பொழுது நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலரும் இருக்கின்றனர்.