பண்டிகை காலங்கள் என்றாலே சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்ப படையெடுப்பார்கள் சென்னைவாசிகள். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் பேருந்துக் கட்டணங்களை கூட்டி அதிக விலையில் வசூலிக்கும் பிரைவேட் ஆம்னி பஸ்கள் பண்டிகை நாட்களை தங்களுக்கு சாதகமாக வைத்துக்கொண்டு 500 ரூபாய் டிக்கெட்டை 1200 என்று விற்று லாபம் பார்ப்பார்கள்.
தற்பொழுது தமிழக அரசு தைப்பொங்கலில் சொந்த ஊர் திரும்புவதற்காக பேருந்துகளை அதிகப்படுத்தியுள்ளது அதுபோல தமிழர் திருநாள் என்றழைக்கப்படும் பொங்கல் ஜனவரி 14 ஆம் தேதி ஆரம்பித்து ஜனவரி 17 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் கொண்டாடுவார்கள்.
பொங்கலுக்கு சொந்த ஊர் திரும்ப மக்கள் சிரமப்படக் கூடாது என்று ஒரு நாளைக்கு 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது தமிழக அரசு.
அதுபோல பொங்கல் தினத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில்கள் பற்றி ரயில்வே துறை என்று அறிவித்துள்ளது.
பொங்கல் சிறப்பு ரயில்கள் லிஸ்ட் இதோ:
ஜனவரி 12 | தாம்பரம் டு நெல்லை | இரவு 9.45 |
ஜனவரி 13 | நெல்லை டு தாம்பரம் | இரவு 9.30 |
ஜனவரி 13 | எழும்பூர் டு நாகர்கோயில் | மாலை 3.30 |
ஜனவரி 14 | நாகர்கோயில் டு எழும்பூர் | மாலை 3.10 |