Monday, May 6, 2024
-- Advertisement--

“யாரையும் சும்மா விட கூடாது” கோவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவி…!!!

ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஆர் எஸ் புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். சில மாதங்களுக்கு முன் பள்ளியில் படிக்க விருப்பமில்லை எனக்கூறி நகராட்சி பள்ளிக்கு மாறினார்.

தற்போது பிளஸ் டூ படித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே மாணவி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எழுந்து செல்லும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உக்கடம், போலீசார் விசாரித்தனர். மாணவி முன்பு படித்த பள்ளியில் மிதுன் சக்கரவர்த்தி 35 என்ற ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாகவே மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பல்வேறு அமைப்பினர் பள்ளி மற்றும் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். இவ்வழக்கு கோவை மாநகர மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. தற்கொலைக்கு 3 மாணவி எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது. இதில் மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட மூவர் பெயரை மாணவி குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது தற்கொலை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவியின் தந்தை கூறுகையில் ஆசிரியரின் தொல்லை காரணமாக அந்த பள்ளியில் படிக்க விருப்பம் இல்லாமல் என் மகள் வேறு பள்ளிக்கு சென்றார். எனினும் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles