பொதுவாக வீட்டில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து குப்பை தொட்டியில் போடுவது தற்போது வழக்கமாக எல்லார் வீட்டிலும் நடக்கும் ஒன்று. அதன் பிறகு அந்த குப்பையை பற்றிய எண்ணம் மனதில் இருந்து மறைந்து விடும்.
அதுபோல பூனே மாநகரை சேர்ந்த ஒரு பெண் வீட்டை சுத்தம் செய்யுமோது தேவையில்லாத பழைய பொருட்களையும் சேர்த்து குப்பை தொட்டியில் போட்டுள்ளார். அப்போது தனது பழைய ஹேண்ட் பேக் ஒன்றும் வேண்டாம் என்று குப்பையோடு குப்பையாக குப்பை லாரியில் போட்டுள்ளார்.
ஆனால் குப்பை லாரியில் போட்டு வந்த பிறகுதான் அவருக்கு நினைவு வந்துள்ளது அந்த பேக்கில் தான் அவரது தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இது இருந்தது தெரிய வந்துள்ளது. அதில் மூன்று லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்துள்ளன.
இதன் பிறகு அவர் மாநகராட்சிக்கு தொடர்பு கொண்டுள்ளார். நடந்ததை அவர் சொல்ல அந்த பகுதிக்கு சென்ற லாரியை வைத்து எந்த குப்பை கிடங்கிற்கு சென்றிருக்கும் என்று அவர்கள் கணித்து தேடியுள்ளனர் நீண்ட நேர தேடலுக்குப் பிறகு அந்த ஹேண்ட்பேக் கிடைத்துள்ளது இதுகுறித்து புனே மாநகராட்சி நன்றி கூறியுள்ளார்.