Saturday, April 27, 2024
-- Advertisement--

அமீர் பிறந்த நாளில் தனது காதலை சொன்ன பாவனி குவியும் வாழ்த்துக்கள்..!!! ஒரு வழியா END CARD போட்டாச்சு..!!!

பாவனி ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற சீரியலில் மூலம் பாவனி சின்னத் திரையில் அறிமுகமானார். அதன்பின் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய பிரபலத்தை அடைந்தார்.

அந்த போட்டியில் வைல்ட் கார்டு என்ட்ரியில் சென்ற அமீர் பாவனி இடம் நெருக்கமாக பழகி வந்தார். பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் அமீர் பாவனி காதலிக்கிறார்கள் என்றெல்லாம் கூறிவந்தார்கள். பாவனியின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று பாவனியை கண்டித்தது வந்ததது மட்டுமல்லாமல் அமீரை திட்டி விட்டு வந்தார்கள்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பும் அமீரும் பாவனையும் ஒன்றாகவே வெளியிடங்களில் சுற்றி வந்தனர். அமீரை காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இருந்தார். பாவனி சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனி நடனமாடி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.

அடேங்கப்பா என்ன ஒரு கெமிஸ்ட்ரி இருவருக்கும் என்று சிறப்பு விருந்தனர்களே பாராட்டினார்கள். பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பாவனி குடும்பத்தினர் கலந்துகொண்டு அமீருக்கு நன்றி தெரிவித்தனர் என்னுடைய சகோதரியை நீங்கள் நன்றாக புரிந்து வைத்து இருக்கிறீர்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று கண் கலங்கி ஒரு வாட்ச் ஒன்றை அமீருக்கு கிபிட் ஆக கொடுத்தார்கள்.

அத்துடன் அமீரை பாவனி வாழ்வில் கிடைத்த ஏஞ்சல் என்றும் அமீர் பாவனியை சிரிக்க வைக்கிறார் சந்தோசப்படுத்துகிறார் என்றும் கூறி வந்தார்கள். பாவனி ரெட்டி அந்த கடிகாரத்தை அமீரின் கையில் கட்டி விட்டார் அப்போதும் தனது காதலை தெரிவிக்காமல் இருந்தார் பாவனி.

இன்று அமீரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஐ லவ் யூ டா அமீர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். பாவனி ரெட்டி போட்ட பதிவில் உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் என் நல்லது கெட்டது நேசிப்பதற்கு நன்றி தங்கமான இதயம் கொண்ட ஒரு மனிதன் நீ. நான் பல விஷயங்களை சொல்ல விரும்புகிறேன் லவ் யூடா பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவின் மூலம் அமீருடனான காதலை உறுதி செய்துள்ள நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாவனி ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை இழந்ததால் மறுமணம் செய்து கொள்ளாமலே இருந்தார். தற்பொழுது அவருடைய வாழ்க்கையில் அமீர் வந்த பிறகு முகத்தில் சந்தோசத்தை பார்க்க முடிகிறது என்று கூறி வருகிறார்கள் பாவனிக்கு நெருக்கமானவர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles