விஜே சித்ரா இறந்த நாளிலிருந்து இன்றுவரை மர்மம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. தைரியமாக எதையும் எதிர்கொள்ளும் பெண்ணாக இருந்த சித்ரா எப்படி இந்த முடிவை எடுத்தார் என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. சூட்டிங் ஸ்பாட்டில் ஏதாவது சேட்டைகள் செய்து கொண்டு சிரித்துக் கொண்டே இருப்பாராம் சித்ரா.
மனதில் பல கவலைகளை வைத்துக் கொண்டு வெளியில் சிரித்த முகத்தை காட்டி கொண்டுள்ளார். சித்ரா தற்கொலை செய்து கொண்டது எதனால் என்று இன்று வரை விசாரணை நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சித்ராவின் இறப்பு செய்தி அறிந்த உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்கள் பாண்டியன் ஸ்டோர் சக நடிகர்-நடிகைகள். அந்த நாடகத்தில் மூத்த அண்ணனாக நடிக்கும் ஸ்டாலின் சித்ராவின் உடலைப் பார்த்து கதறி அழுதுகொண்டே இருந்தார். சித்ரா இந்த முடிவை எடுப்பார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும் அனைவரும் கூறி வந்தார்கள்.
இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மறுபடியும் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன் சித்ராவிற்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பித்திருக்கிறார்கள். சித்ராவை நினைத்து இன்றும் கண் கலங்கி நின்றார்களாம் அவரது சக நடிக நடிகைகள்.
குறிப்பாக கதிர் என்ற கதாபாத்திரத்தில் சித்ராவிற்கு ஜோடியாக நடிப்பவர்க்கும் சித்திராவிற்கும் ஏதாவது வாக்குவாதம் வந்து கொண்டே இருக்கும். அதன்பின் என்னால தானே சண்டை வருது என்று கதிரிடம் வருத்தப்படுவாராம் சித்ரா. இன்று அவரை நினைத்து மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் டீமும் அவர் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உள்ளார்கள் கண்ணீரில் முழிக்கியுள்ளார்கள் முல்லையை நினைத்து.