உலகெங்கும் பல இடங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சிறு குழந்தை முதல் 60 வயது பல்லு போன கிழவி வரை அனைவரையும் பாலியல் இச்சைகளுக்கு வற்புறுத்துகின்றனர் ஆண்கள் . இதற்கு பல நாடுகளில் பல கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் இந்த குற்றங்கள் குறைந்தபாடில்லை.
இதன் காரணமாக தற்போது பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை கொண்டு வரவேண்டும் என பல காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது
இதுகுறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிப்பது குறித்து விவாதிக்கப் பட்ட நிலையில் சிலர் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். இந்நிலையில் மரண தண்டனை வழங்காமல் வேதியல் ரசாயனங்கள் மூலம் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வது குறித்து சிபாரிசு அளிக்கப்பட்டது.
இது ஏற்றுக் கொள்வதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த தண்டனை வரவேற்கத்தக்கதாக உள்ளது என இதற்குப் பல நாட்டு மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுபோல தமிழ்நாட்டிற்கும் இது போன்ற தண்டனைகள் வழங்கினால் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது எனவும் அளித்து வருகின்றனர்.