கொரானா தொற்று பரவிவரும் இந்த அசாதாரண சூழலில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால் பெரும்பான்மையான நேரங்களை பிள்ளைகள் செல்போன் மூலமாகவே செலவழித்து வருகின்றனர்.
சீன செயலிகள் பலவற்றை இந்தியா தடை செய்தது. அது போல பல மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கேமிற்கு அடிமையாகிக் வரும் பப்ஜி கேம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதற்கு பல பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் மீண்டும் இந்த கேம் வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு பைரேட்டட் தளங்கள் மூலமாக சிலர் பப்ஜி தரவிறக்கம் செய்து விளையாடி வந்தனர். ஆனால் தற்பொழுது இரண்டு வார காலமாக எந்த வகையிலும் பப்ஜி கேம் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் இந்திய மார்க்கெட்டில் திரும்ப நுழையும் முயற்சியில் இந்தியாவிற்கான பிரத்தியேகமான விளையாட்டு ஒன்றை பப்ஜி நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.