ஓவியா தமிழ் சினிமாவில் சமீபகாலத்தில் அதிக ரசிகர்களை பெற்ற ஒரே நடிகை ஓவியா தான். ஓவியா “நாளை நமதே” என்று படத்தில் முதலில் அறிமுகம் ஆகினர். அதன் பின் விமல் நடித்து சற்குணம் இயக்கிய “களவாணி” என்று படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தினார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்று மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நிறைய படங்கள் தமிழில் நடித்து வந்தார். பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அறிமுகமான முதல் படமான “மெரினா” என்ற படத்தில் சிவாவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
ஹோம்லியான கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வந்த ஓவியா. திடீர் என்று கவர்ச்சி வேடங்களிலும் நடித்தார். ஓவியா இப்படி எல்லாம் நடிப்பாரா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான “கலகலப்பு” என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அஞ்சலியும், ஓவியாவும் போட்டிபோட்டு கொண்டு கவர்ச்சி காட்டினார்கள்.
அதன் பின் சில படங்களில் நடித்து வந்த ஓவியா விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் நடவெடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் ஓவியா மீது அலாதி பிரியம் கொண்டு சமூக ஊடகங்களில் ஓவியாவை புகழ தொடங்கினர். ஒரு கூட்டம் ஓவியா ஆர்மி என்று ஆரம்பித்து சோசியல் மீடியாவை ஒரு வழி செய்தனர். ஓவியா பிக்பாஸ் மூலம் மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றார். பிக்பாஸ் முடிந்து வெளிவந்த உடன் நிறைய படங்களில் நடிப்பார் என்று ரசிகர்களும் எதிர்பார்த்த்னர். ஆனால் ஓவியா 90ML என்ற சர்ச்சையான படம் ஒன்றில் படு கவர்ச்சியாக நடித்து மக்களிடம் வெறுப்பை சம்பாரித்தார் என்பது தான் உண்மை.
தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் ஓவியா. ஒரு குட்டி ட்ரவுசர் ஒன்றை போட்டு கொண்டு தூக்கத்தில் இருந்து எழுவது போல போஸ் கொடுத்து உள்ளார் ஓவியா. இந்த களவாணி பொண்ணு இப்படிலாம் போட்டோ போடுதே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.