பொதுவாக எல்லோரும் வங்கியில் பணம் சேமித்து வைப்பது தேவைப்படும் காலத்தில் அதை எடுத்து செலவு செய்ய தான். அதற்காக தான் அணைத்து வங்கிகளும் செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில் வங்கியில் வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதி வரை 25 ஆயிரம் பணம் மட்டுமே எடுக்க முடியும் என்று மத்திய நிதி அமைச்சகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால் இந்த கட்டுப்பாடு லட்சுமி விலாஸ் வங்கிக்கு மட்டுமே பொருந்தும்.
வரும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி வரை பணம் எடுக்க மத்திய கட்டுப்பாடுவிதிக்கப்பட்டுள்ளது லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்கில் இருந்து ரூபாய் 25,000 பணம் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது லக்ஷ்மி விலாஸ் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது மட்டுமில்லாமல் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நிறைய பணம் லஷ்மி விலாஸ் வங்கியில் வைத்திருப்பவர்களில் தற்போது அவர்களுக்கு தேவைப்பட்டால் 25 ஆயிரம் மட்டும் எடுப்பது எப்படி சாத்தியமாகும் என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.