கொரானோ தொற்று பரவாமல் இருக்க நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இரண்டு மாத காலமாக வாகனங்கள் இயங்காமல் இருந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு பல தொழில் நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகிறது.ஓலா நிறுவனமும் தற்போது தன் சேவையை தொடர ஆரம்பித்துள்ளது.
மேலும் பச்சை மண்டலமாக இருக்கும் பகுதிகளில் மட்டும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் விதிமுறையின் கீழ் தான் இந்த சேவை இயங்கும் என்றும் கூறப்படுகின்றது. தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களிலும், டெல்லி, குஜராத் ,ஆந்திரா போன்ற சில மாநிலங்களில் இந்த சேவை தொடங்கும் என அறியப்படுகின்றது.
மேலும் ஓட்டுனர் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்,ஒரு வாகனத்தில் இருவருக்கும் மேல் அமர கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.உபர் நிறுவனமும் தனது வாகன சேவையை தொடங்கி உள்ளது .38 நகரங்களில் இந்த வாகன சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது