ரயில்வே துறையில் எந்த ஒரு தேர்வு வைத்தாலும் தமிழகத்தில் அதிக நபர்கள் விண்ணப்பித்து தேர்வை எழுதுவார்கள். ஆனால் தமிழகத்தில் இருந்து மிக குறைந்த அளவில் ரயில்வே துறையில் தேர்வு செய்யப்படுகின்றனர் என்ற குற்றசாட்டு ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நடந்த தெற்கு ரயில்வே சரக்கு ரயிலக்களின் பாதுகாவலர்கள் உயர் பதவிக்காக 96 இடங்களுக்கு பிப்ரவரி , மார்ச் மாதத்தில் தேர்வு நடந்தது.
இதில் மொத்தம் 5000 பேர் கலந்து கொண்டனர். அதில் தமிழகத்தில் இருந்து 3000 பேர் விண்ணப்பித்து தேர்வை எழுதி எழுதினார்கள். ஆனால் வெறும் 5 நபர்கள் மற்றும் தேர்வாகி உள்ளனர். மற்ற 91 பெரும் வடமாநிலத்தை சார்ந்தவர்கள்.
ரயில்வே தேர்வில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் இது போன்ற தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.