Sunday, May 19, 2024
-- Advertisement--

கருமேகங்கள் சூழ்ந்து காரிருளாக காட்சி அளிக்கும் சென்னை..!!

தற்போது நிவர் புயல் காரணமாக கருமேகங்கள் சென்னையை சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ள மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் முன்னர் அதி தீவிர புயலாக மாறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு தொடங்கி விடியும் வரை புயல் கரையை கடக்கும் எனவும் கூறப்படுகின்றது. தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை கொட்டி வருகிறது. மழை மேகங்கள் சூழ்ந்து வரும் படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

சென்னையில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது உள்ளது நிவர் புயல். சென்னையில் 70% இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது . மேலும் சாலையில் உள்ள பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் கடந்த 24 மணி நேரமாக கருமேகங்கள் சூழ்ந்து காரிருள் காட்சியளிக்கின்றது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles