தற்பொழுது வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தை நெருங்கி கொண்டு உள்ளது. இதனால் சென்னை போன்ற நகரங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.
இதனால் சென்னையில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர் மற்றும் கட் ஓவுட்கள் கீழே விழுவதற்கான சாத்தியம் இருக்கிறது. இதனால் உயிர் சேதம் பொருள் சேதம் போன்றவைகளும் நடக்கும், இதனால் உடனடியாக சென்னையில் உள்ள அனைத்து பேனர்களை நீக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புயல் காரணமாக எந்த அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேனர்களை அகற்ற வேண்டும் என்றும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரி கூறியுள்ளார்.