Sunday, May 19, 2024
-- Advertisement--

நிவர் புயலால் வரும் பேரிடர்..!! உதவிக்கு இறங்கிய மக்கள் நீதி மைய படை..!! கமலஹாசன் ட்விட்..!!

தற்போது நிவர் புயல் தமிழகத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பல ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இந்நிலையில் கமஹாசன் மக்கள் நீதி மைய கட்சியை தொடங்கி உள்ளார். நடிகர் கமலஹாசனும் அவர் சார்பில் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ளது. தற்போது இந்த புயல் தீவிர புயலாக மாறி உள்ளது. மேலும் இது கரையை கடக்கும் பொழுது அதி தீவிர புயலாக மாற கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயலால் ஏற்படும் சேதங்களை சரிசெய்ய மக்களுக்கு உதவ மீட்பு படையினர் அனைத்து பகுதிகளிலும் தயாராக உள்ளனர். இந்நிலையில் நடிகர் கமலஹாசன் தனது மக்கள் நீதி மைய கட்சி தொண்டர்களுடன் மீட்புப் பணிகளில் உதவ தயாராக இருப்பதாகக் ட்விட் செய்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் “உத்தரவு கேட்டு உதவிக்கு போவதில்லை, ரத்தத்தில் கலந்து அல்லவா உதவும் மனம், எத்தனையோ ஆண்டு காலமாய் நற்பணிகள் செய்து வரும், நற்பணியில் இறங்கி இருக்கும் மக்கள் நீதி மைய படையினருக்கு வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles