தற்போது நிவர் புயலானது அதி தீவிர புயலாக மாறி இன்று முதல் நாளை அதிகாலை வரை கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்துகொண்டிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
தற்பொழுது சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி இன்று இரவு கரையை கடக்கும் என கூறப்படுகின்றது. அதி தீவிர புயலாக மாறி இன்று முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும்
அப்பொழுது இந்த புயல் மணிக்கு 130 லிருந்து 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும், மேலும் காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிலோ மீட்டர் வரை எட்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் யாரும் இன்று மாலையிலிருந்து வெளியே வரவேண்டாம், எனவும் மிகுந்த எச்சரிக்கையோடு பாதுகாப்பாக இருக்கவும் அரசு வலியுறுத்தி வருகின்றது.