தற்போது தமிழகத்தின் மையம் கொண்டுள்ள புயல் வங்க கடலின் தெற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது.
இதற்கு நிவர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று மாலை தீவிரமாக மாறி நாளை பிற்பகல் மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இன்று காலை புயல் புயல் கரையை நோக்கி 5 கிலோ மீட்டர் வேகத்தில் முன்னேறி வந்தது. இதனால் நாளை பிற்பகலில் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் தற்பொழுது கடந்த மூன்று மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மாற்றங்கள் ஏற்படும்