Monday, May 6, 2024
-- Advertisement--

கொட்டும் மழையிலும் களத்தில் இறங்கிய தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர்..!!!

நிவர் புயல் தாக்கத்தால் சென்னையில் பல இடங்கள் நீர்நிலைகள் நிரம்பி காணப்படுகிறது. சாலைகள் வெள்ளப்பெருக்கு போன்று தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து கிடக்கிறது குறிப்பாக மின்கம்பங்கள் சரிந்து கிடக்கிறது. கொட்டும் மழையிலும் ஈபி பணியாளர்கள் மக்களுக்காக தனது பணியை செய்து வருகின்றனர். காவல்துறையினர் மக்களைப் பாதுகாப்பதற்காக ஒரு பக்கம் போராடி வருகின்றனர்.

பரபரப்பாக இருக்கும் இந்த சூழலில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23.55 அடியை தாண்டியது இதன் முழு கொள்ளளவான 24 அடி விரைவில் எட்டும் என்பதினால் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டுள்ளனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதனால் முன்னெச்சரிக்கைக நடவடிக்கைகளை மக்கள் பாதுகாப்பிற்காக எடுத்து வருகிறது தமிழக அரசு.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை களத்தில் இறங்கி பார்வையிட்டு வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதுபோன்ற கஷ்டமான தருணத்தில் அரசு சிறப்பாக செயல்படுவது மக்களுக்கு பெரிய ஆறுதலாக இருக்கிறது.

அதே நேரத்தில் திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles