Friday, April 26, 2024
-- Advertisement--

மோசமான உடல்நிலையில் நித்யனந்தா..!!! என்ன ஆச்சி நித்திக்கு? வெளியான தகவல்.

நித்யானந்தா சிவனேன்னு கிடந்த என்ன சாமி நீங்க நான் சொன்னேங்க நான் சரின்னு தலையாட்டினேன். கோவில்ல உண்ட கட்டி வாங்கி சாப்பிட்ட என்ன கடவுள் நீங்க என்ன சொன்னீங்க இப்போ என்ன பத்தி தப்பா பேசுறீங்க என்கிற நித்யானந்தாவின் பேட்டி ஒரு நேரத்தில் பெரிய வைரலானது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலிருந்து அடிக்கடி நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு வருவது வழக்கம். நித்யானந்தர் தனக்கென ஒரு ஆசிரமத்தை உருவாக்கி அதில் தனது ஆட்சியை செய்து வந்தார் ஆட்சி மட்டுமல்ல பல சில்மிஷங்களை செய்து வந்தார் என்று கூறுகிறார்கள். அந்த ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தவர்கள்.

நடிகை ரஞ்சிதா நித்யானந்தா வீடியோ வெளியாகி ஒரு நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த வீடியோவில் நான் இல்லை என்னை யாரோ மார்பிங் செய்து வைத்திருக்கிறார்கள் என்று நித்தியானந்தா தரப்பு மறுத்தது. நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவின் மீது தீவிர பக்தி கொண்டவர் நித்யானந்தா எது சொன்னாலும் அதனை மறுக்காமல் செய்பவர்.

ரஞ்சிதா வீடியோ விவகாரம் ஒரு கட்டத்துக்கு மேல் சத்தமில்லாமல் போனது. சமீபகாலமாக நித்யானந்தா கைலாசம் என்ற தீவை உருவாக்கி அதில் பெரிய ஆசிரமம் ஒன்றை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. அந்த நாட்டிற்கு வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் இயங்கும் கருடா ஏர்வேஸ் சர்வீஸ் மூலம் கைலாஷா வரலாம் என்று நித்தியானந்தா ஒரு வீடியோ மூலம் பேசியிருந்தார்.

அங்கு உள்ள தீவில் கைலாஸா பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் ஒரு வங்கிக் கணக்கையும் ஆப்பரேட் செய்துவந்தார் அந்த வங்கிக் கணக்கு சமீபத்தில்தான் முடக்கப்பட்டது. நித்யானந்தாவின் ஆசிரமங்கள் தமிழ்நாட்டில் காத்து வாங்க ஆரம்பித்தது மூன்று வருடங்களாக நித்தியானந்தாவின் பக்தர்கள் எண்ணிக்கை குறையத் தொடஙியது. வருமானம் இல்லாத அவர் கைலாஷாவில் இருப்பதாகவும் நித்தியானந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது. கைலாஸா எங்கு இருக்கிறது என்று இன்று வரை யாருமே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

நித்யானந்தா ஏதோ ஒரு தீவில் பதுங்கிக் கொண்டு கதை சொல்கிறார் என்று கூறி வருகிறார்கள். சமீபத்தில் வந்த செய்தி நித்தியானந்தாவின் உடல் நிலை மோசமாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் அவருடைய இரண்டு கிட்னியும் சரியாக வேலை செய்வதில்லை. அதனால் நித்யானந்தாவின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் மருத்துவர்களால் அவருக்கு என்ன வியாதி வந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது.

ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை. தூங்க முடியவில்லை என கூறும் நித்யானந்தா நல்ல உடல் நிலையில் இருக்கிறேன் சமாதியில் இருக்கிறேன் எனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கே எனக்கு என்ன வியாதி என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறிவருகிறார் நித்யானந்தா உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றால் அங்குள்ள மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விடுவார்கள் என்று மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டு உள்ளது.

கோவை மீடியா என்ற செய்தி நிறுவனம் நித்யானந்தா கைலாசா நாட்டை பற்றி உண்மை தகவல்களை வெளியிட போவதாக அறிவித்து இருதர்கள். அதற்கான ட்ரைலர் ஒன்றையும் இணையத்தில் வெளியிட்டார்கள் ஆனால் நித்தியானந்தாவின் பக்தர்கள் அந்த வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் ட்ரைலரை ஒரு மணி நேரத்திலே தூக்கிவிட்டனர்.

நித்யனந்தா உடல் நிலை மோசமாக இருப்பதாக வரும் செய்திகள் அவருடைய பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles