தமிழ் சினிமாவில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்து வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நிதி அகர்வால். நிதி அகர்வால் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். அந்தப்படத்தில் S .தமன் இசையில் சிம்புவுடன் சேர்ந்து “செல்லக்குட்டி ராசாத்தி” என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
அதைத்தொடர்ந்து லட்சுமணன் இயக்கத்தில் வெளியான பூமி திரைப் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார் நிதி அகர்வால். தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்கினார். தமிழ் திரையுலகில் முதல் நடிகையாக நிவாரண நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அறக்கட்டளை ஒன்றை தொடங்கியிருக்கிறார். இதைப்பற்றி கூறியிருப்பதாவது அன்பை வழங்குவோம்(டிஸ்ட்ரிபூட் லவ்) என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளேன். இதன்மூலம் மக்கள் தங்கள் உணவு,மருந்து தேவை குறித்து தெரிவிக்கலாம் என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.