Monday, May 20, 2024
-- Advertisement--

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் குடும்பத்தில் அடுத்த மரணம்…!!! சோகத்தில் கன்னட திரையுலகம்.

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அப்பு என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி எதிர்பாராதவிதமாக மாரடைப்பு வந்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

நாற்பத்தி ஆறு வயதான இவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்ட உடனே கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு கன்னடம் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் போன்ற திரை உலக பிரபலங்களும் நெருங்கிய நண்பர்கள்.

கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடல் மீது அக்கறை கொண்ட ஒருவருக்கு இப்படி ஒரு சம்பவம் எப்படி நடந்தது என்று இன்றும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. புனித் இறந்து ஒரு மாதங்கள் நெருங்கியுள்ள நிலையில் இன்றும் கர்நாடக மாநிலத்தில் புனித்தின் ரசிகர்கள் அவரின் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி மாலை போட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சினிமாவில் நடித்து விட்டோம் சம்பாதித்து விட்டோம் என்று இல்லாமல் சத்தமில்லாமல் அவர் செய்த உதவி அவர் மறைவுக்குப் பின்பு தான் வெளியே வந்தது. 1800 மாணவ மாணவிகளை படிக்க வைத்தது மட்டுமல்லாமல் முதியோர் இல்லங்கள், பசுக்களைப் பாதுகாக்கும் கோசலை என்று சத்தமில்லாமல் பல உதவிகளை செய்துவந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தனது ரசிகர்களின் குடும்பத்திற்கு மறைமுகமாக பல உதவிகளைச் செய்து வந்திருக்கிறார் மனிதர். இறந்த பின் செய்த கண் தானத்தால் 4 இளைஞர்கள் பார்வை பெற்றனர். புனித் அவர்களின் மறைவிற்கு பிறகு கன்னட ரசிகர்கள் ஒன்று திரண்டு கண்தானம் செய்து உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்து வெளிவர உள்ள திரைப்படம் ஜேம்ஸ். இப்படத்தில் சீக்ரெட் ஏஜென்ட் ஆக நடித்துள்ளார். இவரது திரைப்படத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதி அவரது பிறந்த நாளை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கன்னட நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒருமனதாக ஒரு வாரத்திற்கு வேறு எந்த ஒரு கன்னட படமும் வெளியிடப்பட கூடாது என முடிவு செய்துள்ளனர்.

மேலும் ரசிகர்கள் இன்றும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதோடு புனித் மனைவி அஸ்வினி மரண அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை. மேலும் அஸ்வினி குடும்பத்தில் மற்றொரு மரணம் நிகழ்ந்துள்ளது. புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினியின் தந்தை மாரடைப்பால் காலமானார். புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு பிறகு மிகவும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு நேற்று காலமாகியுள்ளார். இந்த துயரமான சம்பவம் புனித் குடும்பத்தை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles