Sunday, May 19, 2024
-- Advertisement--

தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கொரோனா தொற்று…!!!

தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது இது தொடர்பாக சுகாதார துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழகத்தில் நேற்று ஆண்கள் 487 பெண்கள் 318 என மொத்தம் 805 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 23 ,986 ஆக அதிகரித்துள்ளது .

தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 4239 பேர் குணமடைந்துள்ளனர்.

7547 பேர் சிகிச்சையில் உள்ளனர் அரசு தனியார் மருத்துவமனையில் முதியவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,200 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த 5 ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் அமைச்சர் ஆர் காமராஜ் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் சாதாரண அறையில் கிடைக்கப்பெறும் ஆக்சிஜன் அளவே அவருக்குப் போதுமானதாக இருக்கிறது கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படவில்லை அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles