நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் சரண்யா. முதலில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இவருக்கு நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியலில் நெஞ்சம் மறப்பதில்லை ஒன்றாகும். இந்த சீரியலில் நடிகர் அமித் அவர்களுக்கு ஜோடியாக சரண்யா நடித்திருந்தார்.
நெஞ்சம் மறப்பதில்லை சீரியலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. துணிச்சலான பெண்ணாக அதில் சரண்யா நடித்திருப்பார் அந்த சீரியலுக்கு பின் நிறைய சீரியல் வாய்ப்புகள் சரண்யாவிற்கு கிடைத்தது.
சரண்யாவும் சில மாதங்களுக்கு முன் இறந்த விஜே சித்ராவும் நெருங்கிய தோழிகள். விஜே சித்ரா கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சரண்யாவும் கலந்து கொண்டார். சித்ரா யாரிடமோ மும்முரமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது சரண்யா அவரை கிண்டல் செய்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.
அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் தொடர்பில் இருக்கும் சரண்யா மஞ்சள் நிற சேலையில் பச்சை நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.