தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா ராணி. இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்தார். தமிழில் முதல் முதலாக தேவர் மகன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நீலிமா பிரியசகி என்ற படத்தில் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து மொழி, சந்தோஷ் சுப்ரமணியம், குற்றம் 23 போன்ற பல படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார் நீலிமா.
முதல் முதலாக மெட்டிஒலி என்ற சீரியல் மூலம் அறிமுகமான நீலிமா அதனை தொடர்ந்து பல சீரியலில் நடித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சீரியலில் தயாரித்தும் வருகிறார்.
சினிமா, சீரியல், தொகுப்பாளினி என பன்முகத்திறமை கொண்ட நீலிமாராணி திருமணமானவர். இவரது கணவர் பெயர்
இசைவாணன்.
இவருக்கு அதிர்ச்சி என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது தொடர்ந்து இது 37 வயதான நீலிமாராணி தற்பொழுதும் சிறுவயது பெண்ணாக தனது அழகை மெருகேற்றி வருகிறார்.
இவரது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு வயதிலும் எப்படி இவ்வாறு இளமையாக உள்ளீர்கள் என கருத்து கூறி வருகின்றனர்.
இதோ அந்தப் புகைப்படம்.