நஸ்ரியா சிறு வயதிலிருந்தே நடிக்கத் தொடங்கிய இவர் கேரளத்தில் உள்ள ஒரு பிரபல சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் அதன்பின் நேரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அட்லி இயக்கிய ராஜாராணி என்ற படத்தில் கீர்த்தனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.
ராஜா ராணி படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமான நஸ்ரியா தமிழில் நிறைய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்கஹா படத்தில் நடித்த நஸ்ரியா தனுசுடன் நையாண்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சற்குணம் இயக்கிய நய்யாண்டி என்ற படத்தில் ஒரு காட்சியில் தன்னுடைய இடுப்பை போன்று வேறு ஒருவர் இடுப்பை சித்தரித்து படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
கோலிவுட் வட்டாரத்தில் இது தொடர்பாக சில பஞ்சாயத்து போக அதன்பின் அந்த காட்சியை மட்டும் நீக்கினார்கள். அதற்கு பிறகு வாயை மூடி பேசவும் என்ற படத்தில் துல்கர் சல்மான் அவர்களுக்கு ஜோடியாக நடித்த நஸ்ரியா பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு சற்று விலகி இருந்த நஸ்ரியா நீண்ட வருடங்களுக்கு பிறகு தெலுங்கு சினிமாவில் அன்டி சுந்தரணிக்கி என்ற படத்தில் கமிட்டாகி உள்ளார்.
திருமணத்துக்கு முன் நஸ்ரியாவின் அழகைப்பார்த்து புகழ்ந்து வந்த ரசிகர்கள் தற்பொழுது உள்ள நஸ்ரியாவின் தோற்றத்தைப் பார்த்து என்ன ஆச்சு இவருக்கு ஏன் இப்படி இருக்கிறார். இவர் செய்யும் ரியாக்சன்களும் முக பாவனைகளும் க்யூட்டாக இருக்கும் அதனால் தான் இவரை பெரிதும் ரசிகர்கள் விரும்பினார்கள் தற்பொழுது ஆள் அடையாளமே தெரியாதபடி நஸ்ரியா இருக்கிறாரே என்று சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்தினை பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.