Thursday, May 9, 2024
-- Advertisement--

மாடர்ன் உடையில் தனது வருங்கால கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா…!!! அவரே வெளியிட்ட புகைப்படம்.

நயன்தாரா தமிழில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை. இயக்குனர் ஹரியின் ஐயா என்ற படத்தின் மூலம் கேரளத்து புதுவரவாக அறிமுகமான நயன்தாரா தற்போது தமிழ் மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்துள்ளார்.

நயன்தாரா பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் சரி வளர்ந்துவரும் நடிகரின் படமாக இருந்தாலும் சரி தனது மார்க்கெட்டை பற்றி கவலைப்படாமல் ஜோடியாக நடிப்பார். இவர் நடித்த அறம் என்ற படம் மாபெரும் வரவேற்பை பெற்றதால் அதனைத் தொடர்ந்து நயன்தாராவை மட்டும் வைத்து படம் எடுத்து வந்தார்கள் இயக்குனர்கள் சமீபத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து வெளியாகிய படம் தான் மூக்குத்தி அம்மன் இந்த படம் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது ஆனால் பெரிய அளவில் இல்லை. ரஜினியுடன் நான்காவது முறையாக நயன்தாரா அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஏற்கனவே நயன்தாராவிற்கு ஒரு தடவை காதல் தோல்வி நேர்ந்ததால் மனமுவந்து போன நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை நம்பி காதலித்து வருகிறார்.

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் அடிக்கடி இருவரும் வெளிநாடு சென்று சுற்றி வருவார்கள். தற்பொழுது நயன்தாரா நேற்று தனது வருங்கால காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை கொண்டாடி உள்ளார் மாடர்ன் உடையில் ரொமான்டிக் போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ள நயன்தாரா இதோ அந்த புகைப்படம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles