நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை பல வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா தற்போது தனது அடுத்தகட்ட வாழ்க்கையில் செல்ல இருக்கிறார்.
அதாவது நாளை திருமணம் செய்ய இருக்கிறார் ஜூன் 9-ஆம் தேதி நடக்க இருக்கும் இவர்களது திருமணத்தில் விஐபிகளுக்கு மட்டும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ரஜினி விஜய் அஜித் கமல் சூர்யா அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் ஒரு உச்ச நட்சத்திரத்தின் திருமணம் என்பதால் நயன்தாரா திருமணக்கோலத்தில் எப்படி இருக்கப் போகிறார் என்று ரசிகர்கள் பார்க்க ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் நாளை நடைபெறவிருக்கும் திருமணமத்தையொட்டி தமிழ்நாடு முழுக்க சுமார் 20,000 பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு முழுக்க உள்ள ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்.