Sunday, May 19, 2024
-- Advertisement--

புத்தாண்டை தனது வருங்கால கணவருடன் துபாயில் கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா..!!!

நயன்தாரா காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது CONNECT என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருகான் நடிக்கும் லைன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நயன்தாரா.

தனது வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

கொரோனா காலக்கட்டம் என்பதினால் தனது நிச்சயதார்த்த விழாவை பிரம்மாண்டமாக செய்யாத நயன்தாரா தனது திருமண விழாவை பிரம்மாண்டமாக அனைவரையும் அழைத்து செய்ய வேண்டும் என்று பிளான் செய்துள்ளார். அதற்குமுன் பல கோவில்கள் விக்னேஷ் சிவன் உடன் சென்று பரிகாரங்கள் செய்து வந்த நயன்தாரா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பல ஆண்டுகள் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன்தாரா இந்த ஆண்டு கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார் என கூறப்படுகிறது. போயஸ் கார்டனில் வீடு வாங்கி உள்ள நயன்தாரா அந்த வீட்டில் குடியேறிய பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.

நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை துபாயில் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர். துபாயில் உள்ள புர்ஜ் கலிபா அருகில் நின்று கொண்டு வான வேடிக்கைகளை ரசித்தபடி புத்தாண்டை கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles