Tuesday, May 7, 2024
-- Advertisement--

நயன்தாரா, விக்னேஷ் சிவன் கைது செய்யக்கோரி காவல் ஆணையரகத்தில் புகார்…!!! வெளியான அதிர்ச்சி தகவல்.

விக்னேஷ் சிவன் போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் முதல் படம் சற்று ஓகேவான படமாக இருந்தாலும் அதனை தளபதி விஜய்யின் துப்பாக்கியுடன் ரிலீஸ் செய்ததால் போடாபோடி படம் பெரிய அளவிற்கு வரவேற்பு இல்லாமல் போனது.

விக்னேஷ் சிவன் நயன்தாரா விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வந்தார். அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாரா மீது காதல் கொண்டார். பல வருடங்களாக இருவரும் காதலித்து வருகின்றனர் சமீபத்தில் தான் இருவரின் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்றது.

இன்னும் சில மாதங்களில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடக்க உள்ள நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தனது வருங்கால மனைவி நயன்தாரா வைத்து காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா கண்மணி என்ற கதாபாத்திரத்திலும் சமந்தா கதீஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற நிறுவனத்தை தொடங்கி படத்தை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அண்மையில் நடிகர் அஜித் நடிக்க உள்ள 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவனும் அவரது ரவுடி பிக்சர்ஸ் குழுவும் இணைந்து நள்ளிரவில் வெடி வெடித்து கொண்டாடிய செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆகையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles