தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. சிம்பு, பிரபுதேவா என்று பல காதல் தோல்விகளை கடந்து வந்த நயன்தாரா தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை பல வருடங்களாக காதலித்து வருகிறார்.
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அடிக்கடி வெளிநாடுகள் சென்று சுற்றி அதனை புகைப்படங்களாக வெளியிடுவார்கள். தனது காதலனுடன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளிநாடு சென்று விடுவாராம் நயன்தாரா.
விக்னேஷ் சிவனுக்கு லாபத்தை ஈட்டி தருவதற்காக நயன்தாரா நெற்றிக்கண் என்ற படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்துக் கொடுத்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் நயன்தாரா மற்றொருவர் சமந்தா.
காத்துவாக்குல இரண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் நயன்தாரா தற்போது நடிகை நஸ்ரியாவின் கணவர் பகத் பாசிலுடன் பாட்டு என்ற மலையாள படத்தில் ஜோடி சேருகிறாராம். இந்தப் படத்தை பிரேமம் என்ற மாபெரும் வெற்றிப் படத்தை எடுத்த அல்போன்ஸ் புத்திரன் இயக்குகிறாராம். தமிழ் நாட்டு ரசிகர்களை வசியப்படுத்தி அதுபோல் கேரளாவை வசியப்படுத்த நிறைய மலையாளப் படங்களை தேர்வு செய்து வருகிறாராம் நயன்தாரா.