Monday, May 6, 2024
-- Advertisement--

நாட்டுல எவளோ பிரச்சனை இருக்கு இப்ப நயன்தாரா ஊசி போட்டுக்கொண்டாரா என்கிற விவாதம் தேவையா..!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது இந்தியாவில் இரண்டாவது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பாக 33 ஆயிரத்து மேல் தொற்று பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா தொற்று பாதித்தவர்கள் பெட் ஆக்சிஜன் சிலிண்டர் தடுப்பூசிகள் ரெம் டெசிவிர் கிடைக்காமல் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர் இந்நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் இயல்பாகவே திரையுலகினர் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர் அதைப்போல் மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர்.

அதேபோல் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் போட்டோவை வெளியிட்டனர் அதனை பார்த்த நெட்டிசன்கள் நயன்தாராவிற்கு ஊசியை போடவில்லை விக்னேஷ் சிவன் மட்டும்தான் ஊசி போட்டுக் கொண்டார்.

நர்ஸ் கையில் ஊசியே இல்ல அவர் ஊசி போட்டதாக போஸ் கொடுத்துள்ளார் என்று வதந்திகள் பரவின அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இயக்குனர் விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நர்ஸ் தன் விரல்களால் ஊசியை மறுத்துவிட்டதால் அது புகைப்படத்தில் தெரியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் அதனைத் தொடர்ந்து ஊசி போட்டுக் கொண்டதற்கான போட்டோக்களை இணைய தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles