Wednesday, May 8, 2024
-- Advertisement--

முந்தைய இரண்டு காதல்கள் தோல்வி அடைந்ததற்கு இது தான் காரணம்…! நயன்தாரா ஓப்பன் டாக்…!

தமிழ் திரையுலகில் சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நயன்தாரா. இவர் நடித்த முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இவருக்கு அதற்கடுத்த படவாய்ப்பே சூப்பர் ஸ்டார் ரஜினியோடு நடிக்க கிடைத்தது.

அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் வெற்றியை இவருக்கு பெற்று தந்தன. இவர் நடிகர் சிம்புவுடன் சேர்ந்து வல்லவன் படத்தில் நடித்த பிறகு இவர்கள் இருவரும் காதலித்தனர், இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கூட இணையத்தில் மிகவும் வைரலாகின. ஆனால் இந்த காதல் சில காரணங்களால் தோல்வியுற்றது.

மீண்டும் நயன்தாரா புகழின் உச்சத்தில் இருக்கும் போது இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் இவரின் நடித்த போது பிரபுதேவா ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்தும் காதல் செய்தார். இருவரும் போது இடங்களுக்கு செல்வது என்று சுற்றி வந்தனர். பிரபுதேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். இவர்கள் காதல் கல்யாணம் வரை சென்று பின் இருவரும் பிரிந்து விட்டனர்.

மீண்டும் மன உளைச்சலில் இருந்து வெளிவந்து தற்போது உச்ச நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நயன்தாரா ஆங்கில பத்திரிகை அளித்த பேட்டியில் இதற்கு முன் காதல் தோல்வி ஆனதற்கு நம்பிக்கை அந்த உறவில் முறிந்து போனதே என்று கூறியுள்ளார். எந்த ஒரு உறவிற்கு அடிப்படை நம்பிக்கை, அது இல்லாமல் அந்த உறவில் நீடிப்பது கடினம் என்று கூறினார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles