நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றது. அதேபோல் இப்படத்தின் டீசரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு இருந்தன.
இறுதியாக இப்படத்தில் ஒரு பாடல் மட்டும் எடுக்கப்படாமல் இருந்தது அதனை இன்று எடுத்து மொத்தமாக படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளனர். இதனை கொண்டாடும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு முடிந்ததையொட்டி விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி சந்தோஷமாக கொண்டாடி உள்ளனர்.
அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் நயன்தாரா சமந்தாவிற்கு படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி கம்மல் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். மேலும் கொடுத்த கம்மலின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் கம்மலை பெற்றுக் கொண்டு சமந்தா தனது நன்றியை தெரிவித்துள்ளார்.