நாசர் தமிழ் சினிமாவில் 1985 ஆண்டு பாலச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் வெளியான கல்யாண அகதிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த நாசர் ஹீரோவாக நடித்து வில்லனாக நடித்து தற்போது நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
சீனியர் நடிகரான நாசர் உடல்நிலை காரணமாக சினிமாவை விட்டு விலகுவதாக செய்திகள் பரவி வந்தது. நாசர் சினிமாவை விட்டு விலகுகிறாரா அடடா நல்ல நடிகர் நாசருக்கு என்ன ஆச்சு ஏன் சினிமாவை விட்டு விலகுகிறார் என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் நாசர் அவர்களின் மனைவி காமிலா அவர்கள் நாசரின் உடல்நிலை குறித்தும் சினிமாவை விட்டு விலகப் போவதாகவும் வரும் செய்தி தவறானது.
தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் சினிமா தான் தனது கணவர் நாசரின் மூச்சு என்று பதிவிட்டுள்ளார். நாசர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்பதையும் உறுதிப்படுத்தினார்.
அதுபோல நாசர் அவர்கள் என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே இருப்பேன் என்று கூறியுள்ளார்.