Tuesday, May 7, 2024
-- Advertisement--

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் நமீதா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா…!!!

நமீதா மாரிமுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அவரவர் கதைகளைக் கூறி வந்தனர். அப்போது நமீதா எப்படி திருநங்கை ஆனார் என்பதை விளக்கமாக எடுத்துக் கூறினார். நமீதா கதையைக் கூறும் போது கதறி அழுதார். பார்வையாளர்களையும் கண் கலங்க வைத்தார். அந்த அளவிற்கு அவர் பட்ட கஷ்டங்கள் இன்னல்களை ஒளிவு மறைவு இல்லாமல் கூறியிருந்தார்.

நாடோடிகள் படம் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 40 படங்கள் நடித்து இருக்கிறார். நமீதா அவருடைய உருக்கமான பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. தனது வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை எடுத்துச் சொல்லி அழுத நமீதாவை போட்டியாளர்கள் அனைவரும் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறி வந்தனர். குறிப்பாக இமான் அண்ணாச்சி நமிதாவின் அழுகையை நிறுத்த சொல்லி எழுந்து நின்று கைதட்டி ஆறுதல் கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒரு வாரம் கூட ஆகாத இந்த நிலையில் திடீரென நமீதாவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்தார். நமீதா திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய காரணம் நமீதாவின் உடல்நிலை தான் என்றும் நமீதா கேட்டுக்கொண்டதால் மட்டுமே அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி உள்ளார்கள் என்றும் கூறப்பட்டது.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது நமிதா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்துவருகிறார். தெருவில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவளிப்பது போன்ற வீடியோக்களை பதித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles