Sunday, May 19, 2024
-- Advertisement--

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல சீரியல் நடிகர் கைது..!!! அதிர்ச்சியில் திரையுலகினர்.

சின்னத்திரையில் ஒளிபரப்பான ஹிந்தி சீரியலில் Dil Ki Nazar Se Khoobsurat என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் பியர்ல் V பூரி. அவர் ஹிந்தி சீரியலில் பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார் ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு நாகினி 3 என்கின்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.

அதில் ஹீரோவாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். கடந்த 2019ஆம் ஆண்டு மும்பை அருகே உள்ள வசாயில் என்கின்ற பகுதியில் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றார் அப்பொழுது அந்த படப்பிடிப்புக்கு கலந்து கொண்ட நடிகை தனது 5 வயது மகளை சூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் சிறுமி அனைவரிடமும் விளையாடி கொண்டிருந்ததை அந்த நடிகை பெரிதும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பியர்ல் V பூரி சிறுமியை விளையாட அழைத்துச் செல்வதாகக் கூறி அந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.

அதைக்குறித்து சிறுமி தாயிடம் தெரிவித்துள்ளார் ஆனால் அந்த நடிகை பெரியதாக கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது மறுதினமே அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த பிறகு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ள விவரம் தெரியவந்தது.

இது குறித்து சிறுமியின் தந்தை மும்பை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் தற்போது வசாய் காவல்நிலையம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு குறித்து போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடிகரை கைது செய்துள்ளது.

அதேபோல் மகளுக்கு பாலியல் தொந்தரவு குறித்து போலீசிடம் புகார் கொடுக்காததால் நடிகை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கைதாகி உள்ள செய்தியை அறிந்த பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles