Sunday, May 19, 2024
-- Advertisement--

ஊரடங்கால் வரமுடியாமல் தவித்த மகன்கள். இறந்த இந்து பெண்ணின் உடலை இடுகாட்டிற்கு சுமந்து சென்ற இஸ்லாமியர்கள்…!!!

கொரோனா பாதிப்பினால் உலகநாடுகள் அனைத்தும் நடுங்கி கிடக்கிறது. இந்தியாவிடம் அமெரிக்கா மருந்துகளை கேட்கும் அளவுக்கு நமது நாட்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், பாதுகாக்க காவல்துறையினர் இநேரத்தில் தங்கள் குடும்பத்தை பிரிந்து நமக்காக உயிரை பெருட்படுத்தாமல் வேலை செய்து வருகின்றனர் அங்கே மனிதம் ஜெயித்தது.

இதையும் படிங்க : 10 வயதில் சுட்டியாக பாட்டு பாடிய அசத்திய நஸ்ரியா…!!! வைரல் வீடியோ உள்ளே..!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்று பார்ப்பவரை கண்கலங்க வைத்து கொஞ்சம் யோசிக்கவும் வைத்து உள்ளது. நீண்ட நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த 65 வயது பாட்டி ஒருவர் நேற்று உயிர் இழந்தார். ஊரடங்கு காரணத்தால் அந்த பாட்டியின் இரு மகன்களும் தன் தாய் இறந்ததற்கு வெளியூரில் இருந்து வர முடியாமல் போனது. உடலை இடுகாடு வரை கொண்டு செல்ல வாகனங்கள் இல்லாதால் இஸ்லாமிய நண்பர்கள் இரண்டு கிலோமீட்டர்க்கு தங்களது தோளில் அந்த பாட்டியை சுமந்து சென்று உள்ளார்கள். இந்த செய்தியை அறிந்த அந்த மாநில முதல்வர் பாராட்டி உள்ளார்.

இங்கு மதங்கள் ஜெயிக்கவில்லை ஜெயித்தது மனிதம் தான்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles