கன்னட திரையுலகில் முதன் முதலில் ரிஷப் ஷெட்டி அவர்களின் படத்தில் ரக்க்ஷித் ஷெட்டியுடன் க்ரிக் பார்ட்டி என்னும் படத்தில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தானா.
பின் அவர் தெலுங்கு சினிமாவில் கீதாகோவிந்தம் என்னும் படத்தில் விஜய் தேவரகொண்டா அவர்களுடன் நடித்ததில் மிகவும் புகழ் பெற்றார்.
பின் அவர் அல்லு அர்ஜுன் அவர்களுடன் புஷ்பா படத்தில் நடித்ததனால் பணிந்தியா இந்தியா ஸ்டார் ஆக மாறினார்.
அவர் தமிழிலும் கார்த்தி அவர்களுடன் “சுல்தான்” மற்றும் விஜய் அவர்களுடன் “வாரிசு” போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அவர் தொடர்ந்து Bollywood MOVIES குட்பாய் மற்றும் மிஷன் மஜ்னு போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அவர் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கின்ற படம் அனிமல். அதில் அவர் கதாபாத்திரத்தின் பெயர் கீதாஞ்சலி ஆகும்.
ராஷ்மிகா மந்தானா அவர்களின் முதல் படமான க்ரிக் பார்ட்டியின் கதாநாயகனான ரக்க்ஷித் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் ஆன நிலையில் பின் இருவருடன் சம்மதத்துடன் திருமணம் கைவிடப்பட்டது.
தற்போதைய இன்டர்வியூவில் பேட்டி கொடுத்த ரக்க்ஷி ஷெட்டி அவர்கள் ராஷ்மிகா அவர்களுக்கும் தனக்கும் இன்னுமும் தொடர்பு உள்ளதாகவும், அவருக்கு ஒரு பெரிய கனவு உள்ளதாகவும் அதை நிறைவேற்றுவதற்காகவே அவர் பயணத்தை தொடர்கின்றார் என்றும் கூறியுள்ளார்.