கேரள மாநிலத்தில் சேர்ந்த மூணாறு அருகே ராஜமலை பெட்டி மூடி எஸ்டேட் பகுதியில் தொடர் மழை காரணமாக கடந்த ஆறாம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவினால் அங்கு வசித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80 பேர் வரை இந்த நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அங்கு நடைபெற்று வருகின்றது. இந்த மீட்பு பணியில் 61 சடலங்கள் நிலச்சரிவில் மீட்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி நிலச்சரிவில் சிக்கி பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.