Saturday, May 4, 2024
-- Advertisement--

தஞ்சாவூரில் வீட்டுக்குள் புகுந்து பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு..!!! குழந்தையை சடலமாக மீட்பு..!!! கதறி அழும் பெற்றோர்கள்..!!!

பிறந்து 8 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகளை குரங்கு தூக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசிப்பவர் தான் ராஜா இவர் பெயிண்டர் ஆக வேலை செய்து வருகிறார் இவரது மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு கடந்த எட்டு நாட்களுக்கு முன்புதான் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

புவனேஸ்வரி அவர்கள் தனது இரண்டு பெண் குழந்தைகளும் வீட்டில் தொட்டியில் தூங்க வைத்துவிட்டு வேறு அறைக்கு சென்று இருக்கிறார். அப்பொழுது இரண்டு குரங்குகள் வீட்டிற்குள் புகுந்து இரண்டு பச்சிளம் குழந்தைகளை பெற்றோர்கள் சுதாரிப்பதற்குள் தூக்கிச் சென்று விட்டு ஓடியது.

பதறிப்போன பெற்றோர் குரங்கை பின்தொடர்ந்து சென்ற போது ஒரு குழந்தை மட்டும் வீட்டின் ஓட்டு கூரை மேல் வைத்து விட்டு மற்றொரு குழந்தையை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டது அந்த பகுதியில் உள்ள மக்கள் திரண்டு தேட ஆரம்பித்தனர் அப்பொழுது மற்றொரு பெண் குழந்தை அகழியில் சடலமாக கிடந்தது. பரிதாபமாக இறந்த குழந்தையை சடலமாக மீட்டெடுத்துள்ளனர்.

தனது குழந்தையை பறிகொடுத்த தாய் வேதனை தாங்க முடியாமல் கதறி அழத்தொடங்கினார்.

இதில் யார் மேல் தவறு பக்கத்தில் அனுமன் கோவில் இருந்தும் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை. மனசாட்சி இல்லாமல் குரங்கு இப்படி செய்து விட்டதே என்று மக்கள் வருத்தப்பட்டனர்.

எட்டு நாட்களே ஆன குழந்தையை பறிகொடுத்த தாய்க்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று திகைத்துப் போய் நின்றார்கள் இந்த சம்பவத்தை பார்த்தவர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles