தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களது தந்தையும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி வருவதால் பிறந்தநாள் விழாவை கொண்டாட திமுகவினர் முடிவு செய்துள்ள நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன் தந்தையின் பிறந்தநாள் ஊரடங்கு காலம் என்பதால் பொது வெளியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்களின் உயிரை காப்பது ஒன்றே நம் முன் உள்ள தலையாய பணி என்றும் அதற்காக நம்மை முழுமையாக அர்ப்பணித்து செயலாற்றுவதே கலைஞரின் பிறந்தநாள் விழாவுக்கு சிறப்பு சேர்ப்பதாகும் தெரிவித்துள்ளார்.
கலைஞர் அவர்களின் பிறந்த நாளை அவரவர் இல்லங்களிலிருந்து உருவப்படத்துக்கு மரியாதை செய்து கொண்டாடுங்கள் என்று அவரது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊரடங்கில் ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடம் சென்று உணவு பொருட்களை வழங்கினார்கள் என்றும் ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்பதே கலைஞர் பிறந்தநாள் விழாவுக்கான செயல் திட்டமாக அமையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.