Wednesday, May 22, 2024
-- Advertisement--

ஊரடங்கு காலத்தில் முதல் முறையாக தமிழகத்தில் மருந்து கடைகள் மூடல்..!! காரணம் என்ன..?

ஊரடங்கு காலத்திலும் பொதுமக்கள் தடையின்றி மருந்துகள் வாங்கவும், நோயாளிகளின் நலன் கருதியும் எந்த கடைகள் மூடப்பட்டாலும் மருந்து கடைகள் மட்டும் கடந்த 3 மாதகாலமாக திறந்து உள்ளன. இந்நிலையில் முதல் முறையாக ஊரடங்கு காலத்தில் மருந்து கடைகள் மூடப்பட்டுள்ளன.

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து பல சர்ச்சைகளும் பரபரப்பும் தமிழ்நாட்டில் நிலவி வருகின்றன. இதன் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு என்று வணிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கு முழுவதுமாக மக்கள் வணிகர் சங்கங்கள் ஒத்துழைப்பு கொடுத்தும் மக்களின் நலன் கருதி இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டும் மருந்து கடைகள் மூடப்படும் என மருத்துவ வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் தூத்துக்குடிமாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவர் காவல் நிலையில் மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles