நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அயலான், மற்றும் மாவீரன் பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இதையடுத்து கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில் இவர் தற்போது புதிய திரையரங்கம் ஒன்றை சென்னையில் தொடங்க உள்ளதாக பிரபல தெலுங்கு தொழிலதிபரும் திரையரங்க உரிமையாளரான சுனில் நரங் கூறியுள்ளார்.
திரையரங்கு பிசினஸில் சிவா?
நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது, இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் சிவகார்த்திகேயன் படு பிஸியாக இருக்கிறார் நேற்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள வண்ணாரப்பேட்டையில் என்ற பாடல் வெளியானது.
இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு உள்ளது இந்த நிலையில் அவர் தற்போது திரையரங்கு தொழிலில் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரையரங்க உரிமையாளர் சொன்ன தகவல்?
ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏசியன் சினிமாஸ் என்ற பெரிய திரையரங்க கூட்டமைப்பின் தலைவர் சுனில் நரங்.
இவர் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார், அப்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து சென்னையில் தியேட்டர் ஒன்றை அமைக்கப் போவதாக கூறினார்