Friday, May 17, 2024
-- Advertisement--

இசையமைப்பாளர் ஆவதற்கு 8 வருடங்களுக்கு முன் திருமண கச்சேரியில் பியானோ வாசித்த அனிருத்…!!! வைரல் வீடியோ உள்ளே.

அனிருத் இன்றைய இளைஞர்களின் favourite இசை அமைப்பாளர். இவர் முதல் படத்திலே அருமையான பாடல்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதிலும் அந்த படத்தில் இடம் பெற்ற “why this கொலவெறி” பாடல் யூடியூபில் பல சாதனைகளை புரிந்தது. ஒரு தமிழ் பட பாடல் மற்ற மொழிகளிலும் பெரிய பிரபலமாய் பேசப்பட்டது.

அனிருத் இசை அமைப்பை பார்த்து மிரண்டு போன தளபதி விஜய் அவர்கள் ‘கத்தி” படத்தின் போது அனிருத்துக்கு பியானோ ஒன்றை பரிசாக கொடுத்தார். அது மட்டும் அல்லாமல் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு அனிருத் இசை என்றால் ரொம்ப பிடிக்குமாம். அவருடன் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஒரு சில நிகழ்ச்சிகளில் சொல்லி இருக்கிறார். அனிருத்தின் ஒவ்வொரு புதிய ஆல்பம் ரிலீஸ் ஆகும் போது இயக்குனர் ஷங்கர் அதனை கேட்பாராம்.

இன்று 3 முதல் மாஸ்டர் வரை அவர் இசை அமைத்த பாடல்கள் பெரிதும் ஹிட். தற்பொழுது அனிருத்தின் மாஸ்டர் படத்தின் பாடல்களும் ஹிட். குறிப்பாக தளபதி விஜய் பாடிய “குட்டி ஸ்டோரி ” பாடல் செம வைரல் ஹிட். இந்த உயர்ந்த நிலையை அடைந்த அனிருத் மூணு படம் இசை அமைக்கும் முன்வே அதாவது அவர் இசை அமைப்பாளர் ஆகும் முன்னவே உறவினரது திருமண கச்சேரியில் பியானோ வாசித்து கொண்டு இருந்துள்ளார். இந்த வீடியோ 8 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது என்றாலும் தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகிக்கொண்டு இருக்கிறது. இதோ அந்த வீடியோ.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles