மன்சூர் அலிகான் பிரபல வில்லன் நடிகர் என்பது அனைவர்க்கும் தெரியும். ஆனால் நேற்று அவர் பேசிய அந்த வில்லத்தனமான பேச்சு தான் இன்று அவருக்கு பெரிய கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் மன்சூர் பேசியது கற்பழிக்க கூட முடியலபா லியோ திரைப்படத்தில் திரிஷா நடிக்கிறாங்க என்று என்னிடம் கதை சொல்லும் போது சொன்னாங்க எனக்கு ஒரே சந்தோசம். நிச்சயம் த்ரிஷாவுடன் படுக்கையறை காட்சிகள் இருக்கும் எப்படி கட்டிலில் தூக்கி குஷ்புவை ரோஜாவை போட்டமோ அது மாறி த்ரிஷாவை செய்யலானு நினைச்சேன் ஆனால் ஆஞ்சநேயர் சீரஞ்சீவி மலையை தூக்கிய மாதிரி அவங்க பாதத்தை கூட படவிடலை காஷ்மீருக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க நம்ம 150 படங்களாக நிறைய வில்லத்தனம் பண்ணிட்டோம் என்று பேசி இருந்தார்.
மன்சூர் பேசிய வீடியோ த்ரிஷாவின் கண்ணில் பட அதனை பார்த்த திரிஷா கோவமாக பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். மன்சூர் அலிகான் பேச்சு எல்லை மீறி மிகவும் கீழ்த்தனமாக இருந்ததது. அதில் இது போன்ற கெட்ட எண்ணம் உள்ளவருடன் இனி நடிக்கவே மாட்டேன். இது தவறான செயல் என்று பதிவிட்டு உள்ளார்.
த்ரிஷாவின் இந்த பதிவிற்கு பிறகு த்ரிஷாவிற்கு ஆறுதல் கூறி நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் தங்களது கோபத்தை மன்சூர் மீது வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த சர்ச்சை குறித்து மன்சூர் கூறி இருப்பது இதோ: