தமிழில் கவுண்டமணி செந்தில் வடிவேலு சந்தானம் இவர்களுடைய நகைச்சுவைக்கு பிறகு யாருடைய நகைச்சுவையும் பெரிதாக இன்னும் மக்களை கவரவில்லை. நடிகர் சூரியும் யோகி பாபு தற்பொழுது ரசிகர்களை ஓரளவிற்கு சிரிக்க வைத்து வருகிறார்கள்.
எந்த ஒரு நகைச்சுவை காட்சியாக இருந்தாலும் அதில் மனோபாலா இடம் பெறுவார். மனோபாலாவின் உடல்வாகை பார்த்தாலே சிரிப்பு வரும் அந்த அளவிற்கு மக்களை கவர்ந்தவர் மனோபாலா.
நடிகர் விவேக் அவர்களுடன் தடுப்பூசி போட சென்றபோது விவேக் அவர்கள் மனோபாலாவை ஒரு ஊசியே ஊசி போட்டுகொள்ளுதே என்று கிண்டல் செய்து சிரித்தது அனைவரும் அறிந்ததே.
அடிக்கடி தனது பதிவுகளை சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் மனோபாலா நேற்று திடீரென்று அவருடைய புகைப்படத்தை க்ளோசப்பில் வெளியிட்டார் அதனை பார்த்த ரசிகர்கள் மனோபாலா அவருக்க என்று என்ன ஆச்சு அவர் மருத்துவமனையில் உள்ளது போல இருக்கிறது என்று சமூக வலைத்தளத்தில் கேட்க ஆரம்பித்தார்கள்.
ஒரு சிலர் மனோபாலா சீரியஸாக இருக்கிறார் என்று சமூக வலைத்தளத்தில் ட்வீட் செய்ய தொடங்கினர். ஒரு சிலர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளார் போல என்று நினைத்து GET WELL SOON SIR என்று ஆறுதல் சொல்ல ஆரம்பித்தார்கள்.
இதனை பார்த்த மனோபாலாவிட்ட ஆளே இல்லனு சொல்லிடுவாங்கனு சுதாரித்து கொண்ட மனோபாலா என் அன்பு மக்களே…நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல..நான் நல்லாதான் இருக்கேன்..ஒண்ணுமில்லை…அன்பு காட்டிய ( அப்படிதான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள் என்று தெரிவித்து உள்ளார்.
அவருடைய ட்வீட் பார்த்த ரசிகர்கள் இதுக்குத்தான் ஒன்னு pose ஒழுங்கா கொடுக்கணும், இல்ல Caption ஆச்சும் போடணும் என்று கூற மனோபாலா ஆமா ஆமா என்று கூறியுள்ளார்.