Friday, May 17, 2024
-- Advertisement--

திடீர் மாரடைப்பால் கணவனை பறிகொடுத்த சிம்பு பட நடிகை..!!! கணவரின் இறுதி சடங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.

மந்த்ரா பேடி முதலில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவர் ஹிந்திப்படங்களில் நடித்து வந்தார் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சிலம்பரசன் இயக்கி நடித்த மன்மதன் என்ற படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மந்த்ரா பேடி ராஜ் கௌசல் என்பவரை 1999ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார் தற்பொழுது மந்த்ரா விற்கு விர் என்ற மகன் உண்டு மந்த்ர அவரது காதல் கணவரும் ஒரு பெண் குழந்தை ஒன்றை தத்து எடுத்து வளத்தார்கள்.

சந்தோசமாக இவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருக்க திடீரென்று மந்த்ரா பேடி காதல் கணவர் ஜூன் முப்பதாம் தேதி மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். இறப்பதற்கு முதல் நாள் அவருடைய நண்பர்களை தனது வீட்டிற்கு அழைத்து சந்தோஷமாக பேசி மகிழ்ந்து உள்ளார் மந்த்ராவின் கணவர்.

தனது கணவன் தான் வாழ்க்கை என்று வாழ்ந்து வந்த மந்த்ரா பேடி தனது கணவன் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழ தொடங்கினர் அதனைத்தொடர்ந்து தனது கணவருக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதை மற்றும் சடங்குகளை தானே முன்னின்று ஒவ்வொன்றாக செய்தார். தனது காதல் கணவரை நினைத்து இறுதி சடங்குகளை செய்து கொண்டே கண்ணீர் விட்டு அழுதார் மந்த்ரா பேடி.

மந்த்ரா பேடியின் கணவர் இறப்புக்கு தமிழ் நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து வந்தனர். குறிப்பாக குஷ்பு அவர்கள் இரங்கலை தெரிவித்தார் அதில் வாழ்க்கை மிகவும் கணிக்க முடியாதது. யாரோ ஒருவர் திடீரென புறப்படும்போது அது உங்களை கடுமையாக தாக்கும். ராஜ் குஷால் மிக விரைவில் சென்றார். ஆழ்ந்த இரங்கல் என்று வருந்தி ட்வீட் செய்து இருந்தார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles