மாஸ்டர் படம் பார்ப்பதற்காக மலேசியாவில் இருந்து தனது குடும்பத்துடன் சென்னை வந்து இறங்கிய விஜய் ரசிகை.
விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்து வரும் படம் தான் மாஸ்டர். இந்தப்படத்தை மாநகரம் கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் என்ற இயக்குனர் இயக்கி இருக்கிறார்.
மாஸ்டர் படம் பாதி இயக்குனர் லோகேஷ் பாணியிலும் பாதி விஜயின் பாணியிலும் இருந்தது. முதல்நாள் கலவையான விமர்சனங்களை சந்தித்த மாஸ்டர் அடுத்தடுத்த நாட்களில் வசூல் பார்த்து மிரண்டு போயுள்ளது தமிழ் திரை உலகம்.
கொரோனா காரணத்தினால் தியேட்டருக்கு வராமல் இருந்த மக்கள் விஜயின் படம் ரிலீசாகிறது எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று தியேட்டரில் குடும்பம் குடும்பமாக படையெடுக்க தொடங்கினார்கள்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் சமீபத்தில் தான் 100% இருக்கைகளுக்கு அனுமதி கொடுத்தது அரசு. பிறநாடுகளில் இன்னும் திரையரங்குகள் வழக்கம்போல செயல்பட அந்தந்த நாட்டு அரசு அனுமதி கொடுக்கவில்லை.
விஜய்யின் தீவிர ரசிகையான மலேசிய வாழ் தமிழ் பெண் ஒருவர் விஜய்யின் மாஸ்டர் படத்தை எப்படியாவது தியேட்டரில் பார்க்க வேண்டுமென்று மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளர். அப்பொழுது மாஸ்டர் படத்தை தனது குடும்பத்துடன் பார்ப்பதற்காக PVR தியேட்டரில் ஒரு ஷோவ்வை முழுவதும் புக் செய்து தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மாஸ்டர் படத்தை பார்த்து உள்ளார். இதற்கு மட்டும் 22000 செலவு செய்து இருக்கிறார் அந்த பெண் ரசிகை. மலேசியாவில் இருந்து சென்னை வந்தது மற்றும் கோவிட் டெஸ்ட் அனைத்தும் சேர்த்து கிட்டத்தட்ட 50000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து உள்ளார் விஜயை பார்ப்பதற்காக.
இதுகுறித்து விஜய்யின் ரசிகை ஆஷ்லினா கூறியது நான் சிறு வயதிலிருந்தே விஜயின் தீவிர ரசிகை எப்பொழுது விஜய் படம் வெளியான முதல் நாளே பார்த்து விடுவேன் ஆனால் மாஸ்டர் மலேசியாவில் இன்னும் திரையரங்கம் திறக்கப்படாததால் பார்க்க முடியாமல் போனது அதனால் சென்னைக்கு விமானம் மூலம் வந்து சத்யம் தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்து மகிழ்ந்தேன் என்று கூறியதுடன் விஜயை தலைவா நீங்க வேற லெவல் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
மாஸ்டர் படத்தைப் பார்ப்பதற்காக மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த விஜய் ரசிகையை பார்க்கையில் விஜய்க்கு இப்படியும் தீவிர ரசிகை உள்ளார்களா என்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது.