Monday, May 20, 2024
-- Advertisement--

பிரபல நகைச்சுவை நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார்…!!!

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் பிரதீப் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். கோட்டயம் பகுதியை சேர்ந்த பிரதீப் அவரது இல்லத்தில் இருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். நடிகர் கோட்டயம் பிரதீப் நகைச்சுவை கதாபாத்திரத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

அதில் ’ஈ நாடு இன்னாலெ வரே’ என்ற படத்தின் மூலம் பிரதீப் திரை உலகில் அறிமுகம் ஆனார். அவர் இதுவரை நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் பிரதீப் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, நண்பேன்டா, தெறி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles