மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை ஒன்று வைத்துள்ளார். அதில் ஏழை எளிய மக்களின் பசியாற்றும் மையங்களாக திகழ்கின்ற அம்மா உணவகங்கள் மலிவு விலையில் இங்கே வழங்கப்படும் உணவுகளை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை கொரோனாவிற்கு பிறகு பன்மடங்கு பெருகி உள்ளது.
தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்கள் ஈர்க்கப்பட்டு அவற்றை பிற மாநிலங்களும் செயல்படுத்த முயற்சி செய்து வருகின்றன திமுக அரசும் அம்மா உணவகங்களை கைவிடும் எண்ணமில்லை என்று அறிவித்து இருந்தது சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு நேர உணவு முறையில் மாற்றம் செய்துள்ளதாகவும் பணியாட்களை குறைத்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
அதனை பார்க்கையில் மிகவும் கவலையாக இருக்கிறது அம்மா உணவகங்களில் இரவு உணவுக்கு சப்பாத்தி தயாரிக்கப்பட்டு வந்தது இது மருத்துவமனையில் நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், முதியோர் போன்றோருக்கு பயனுள்ளதாக இருந்தது தற்போது திடீரென்று சப்பாத்திக்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கப்படுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது அதுமட்டுமல்லாமல் பணி நீக்கமும் பணியிட மாற்றமும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
அம்மா உணவகம் திட்டம் பெயர் மாற்றப்படாமல் சிறப்பாக தொடரும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் உறுதி அளித்திருந்தார் ஆனால் தற்போது அவர் உறுதி மொழிக்கு எதிரான செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு பலன் தரக்கூடிய இந்த திட்டத்தை முந்தைய ஆட்சியாளர்கள் விட சிறப்பாக செயல்படுத்துவது அரசுக்கு பெருமை தருவதாக இருக்க முடியும் அம்மா உணவகத்தை தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாக செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கேட்டுக்கொண்டார்.